LATEST NEWS
விடிஞ்சதுமே எடப்பாடிக்கு ஷாக்..! மன வேதனையுடன் அதிமுகவிலிருந்து விலகினார்.. அடுத்தடுத்து பரபரப்பு…!!
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜசேகரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தலில் கட்சியின் மூத்த நிர்வாகிகளே தனக்கு எதிராக வேலை செய்ததாகவும், உள்ளடி வேலைகளால் தான் தனது வெற்றி வாய்ப்பு பறிபோனதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தலைமைக்கு இது குறித்து புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மிகுந்த மனவேதனையுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தனது விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவின் முக்கிய நிர்வாகியாகவும், கட்சியின் பொருளாதாரப் பலமாகவும் விளங்கிய ராஜசேகரனின் இந்த திடீர் விலகல் திருச்சி மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல்கள் மற்றும் அதிருப்திகள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இவரது விலகல் திருச்சி பகுதியில் அதிமுகவின் அடிமட்டக் கட்டமைப்பிலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் கட்சிக்கு ஒரு பின்னடைவாக அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
