LATEST NEWS
“ஏன் தம்பி.. ரோடு வழியா போகாம, ஷார்ட்கட்னு ஆத்து வழியா போறீங்க..?”மும்பை வெள்ளத்தில் மிதந்து சென்ற பைக்கின் அதிரடி வீடியோ..!!
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, பெரும்பாலான சாலைகள் குளங்களைப் போலக் காட்சியளிக்கின்றன. இதில் குறிப்பாக, மும்பைக்கு அருகிலுள்ள வசாய் பகுதியின் சன்சிட்டி சாலையில் எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெய்த மழையினால் ஒட்டுமொத்த சாலையும் வெள்ளத்தில் மூழ்கி, பார்ப்பதற்கு ஒரு பெரிய ஏரி அல்லது கடல் போலக் காட்சியளிக்கிறது.
இவ்வளவு மோசமான வெள்ள சூழ்நிலையிலும், வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கியபடி தனது பைக்கை ஓட்டிச் செல்லும் காட்சி இணையத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சாலையில் மரம், செடி என எதுவுமே தெரியாமல் முற்றிலும் மட்டமான சேற்று நீர் மட்டுமே சூழ்ந்துள்ளது. இதனால் சாலை எங்கு இருக்கிறது என்றே தெரியாத நிலையில், சாலையோரம் இருக்கும் மின் கம்பங்களை மட்டுமே அடையாளமாக வைத்துக் கொண்டு அவர் தனது பைக்கை முன்னோக்கி ஓட்டிச் செல்கிறார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
https://www.instagram.com/reel/Daa4Wpisize/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோவைப் பார்த்த சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் வேடிக்கையாக, “ஏன் தம்பி ரோட்டை விட்டுட்டு ஆத்துல பைக் ஓட்டுறீங்க?” என்று கிண்டல் செய்தாலும், பெரும்பாலான மக்கள் மும்பையின் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தின் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கான்கிரீட் காடுகளை உருவாக்குவதற்காகப் பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டதே இந்தத் திடீர் வெள்ளத்திற்குக் காரணம் என்றும், இது வளர்ச்சி அல்ல, பேரழிவு என்றும் மக்கள் தங்களது ஆதங்கத்தை அரசுக்கு எதிராகப் பதிவிட்டு வருகின்றனர்.
