LATEST NEWS
நடந்தது என்ன? “என் வெற்றிக்கு அவர் தான் காரணம்!” – அத்தனை சர்ச்சைகளையும் தாண்டி மாதம்பட்டியாரை கொண்டாடும் முதல் மனைவி ஸ்ருதி!
பிரபல சமையல் கலைஞரும், ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோருக்கு இடையேயான ரகசிய திருமண விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் புயலை கிளப்பியது. தங்களுக்கு திருமணம் நடந்ததாகவும், தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும், ஆனால் ரங்கராஜ் தன்னை ஏமாற்ற நினைப்பதாகவும் கூறி ஜாய் கிரிஸில்டா அளித்த புகார் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன்னுடைய தரப்பு நியாயத்தை நிரூபிக்க இணையத்தில் அடுத்தடுத்து பல வீடியோக்களையும் பதிவுகளையும் அவர் வெளியிட்ட நிலையில், இந்த விவகாரம் பொதுவெளியில் பேசுபொருளாக மாறியது.
இந்த சிக்கலான சூழ்நிலையில், ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி அவருக்கு முழு ஆதரவாக நின்றது இணையத்தில் பலத்த விமர்சனங்களை சந்தித்தது. கணவர் செய்த தவறை சுட்டிக்காட்டாமல் அவருக்கு அரணாக நிற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என பலரும் ஸ்ருதியை கடுமையாக சாடினர். இருப்பினும், பிறந்த குழந்தை தன்னுடையது தானா என்பதை மரபணு சோதனை மூலம் நிரூபித்தால் ஏற்றுக்கொள்வதாக ரங்கராஜ் கூறியிருந்தார். இறுதியில், அந்த சோதனையின் முடிவில் குழந்தை ரங்கராஜுடையது தான் என்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு தமக்கு சாதகமான முடிவு வந்ததை எண்ணி ஜாய் கிரிஸில்டா பெருமகிழ்ச்சி அடைந்தார்.
தற்போது இந்த சர்ச்சைகள் அனைத்தும் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், சமீபத்திய பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல் மனைவி ஸ்ருதி முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது வாழ்வில் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு எக்காரணத்தைக் கொண்டும் நாம் நமது முடிவுகளை மாற்றிக்கொள்ளக் கூடாது என்றார். கணவன் – மனைவி இடையேயான பரஸ்பர புரிதலே ஒரு உறவில் மிகவும் அவசியம் என்று வலியுறுத்திய அவர், இன்றைய தனது வெற்றிக்கு கணவர் ரங்கராஜ் மட்டுமே முக்கியக் காரணம் என்றும், மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உண்மையாக வாழ்வதே சிறந்தது என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
