LATEST NEWS
நள்ளிரவு அரசியல் சதியா?.. சபாநாயகர் முன் வரிசையாக ஆஜராகும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்.. பின்னணியில் இருக்கும் மெகா ரகசியம்..!!
தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக உட்கட்சிப் பூசல்களால் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மாஜி அமைச்சர் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மற்றும் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளைத் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தற்போது வரிசையாக சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தாராபுரம் சத்யபாமா சபாநாயகரைச் சந்தித்துள்ள சூழலில், இன்று பெருந்துறை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார் சபாநாயகரை நேரில் சந்தித்துப் பேசினார். தான் எந்தக் காரணத்திற்காகத் தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது என்பது குறித்த விரிவான மற்றும் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அவர் சபாநாயகரிடம் முறைப்படி அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, இவர்கள் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தபோது அளித்த கடிதமும் அதற்கான விளக்கமும் முழுமையாகவோ அல்லது விதிமுறைகளுக்கு உட்பட்டோ இல்லை என்று சபாநாயகர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், சட்டப்பேரவை விதிமுறைகளின்படி சபாநாயகரே நேரடியாக விளக்கம் கேட்டு அழைப்பு விடுத்ததன் பேரிலேயே இந்த அடுத்தடுத்த சந்திப்புகள் அரங்கேறி வருகின்றன. ஜெயக்குமாரைத் தொடர்ந்து, ராஜினாமா செய்த பிற முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களும் சபாநாயகரைச் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதால், இந்த அதிரடி நகர்வுகள் தமிழக அரசியலில் அடுத்தகட்ட மெகா மாற்றத்திற்கான அறிகுறியா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
