LATEST NEWS
“BREAKING: ரூ.2,000 நோட்டுகள்.. மத்திய அரசின் புதிய அதிரடி உத்தரவு..!!
கடந்த 2023-ஆம் ஆண்டு மே 19 முதல் ₹2,000 நோட்டுகளின் புழக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அவற்றை மாற்றிக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, பொதுமக்களிடம் இன்னமும் ரூ.2,000 நோட்டுகள் இருந்தால், அவற்றை நேரடியாக ரிசர்வ் வங்கியின் கிளை அலுவலகங்களுக்குச் சென்று தடையின்றி மாற்றிக் கொள்ளலாம் என்றும், அவ்வாறு நேரடியாக வர முடியாதவர்கள் தபால் மூலமாக நோட்டுகளை அனுப்பி வைத்தால், அதற்கான தொகை அவர்களின் குறிப்பிட்ட வங்கிச் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
