CINEMA
“தலைவா இது நிஜமா?.. ஒட்டுமொத்த கோலிவுட்டையும் உலுக்கிய ரஜினியின் அந்த முடிவு.. கண்ணீரில் லட்சக்கணக்கான ரசிகர்கள்”..!!
கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த், தனது 175-வது படத்துடன் திரைத்துறையிலிருந்து முழுமையாக ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள ‘தர்மன்’ திரைப்படம் அவரது திரையுலகப் பயணத்தின் 173-வது படமாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளார். இந்தப் படங்களுக்குப் பிறகு, மேலும் ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்துவிட்டுத் தனது நீண்டகால சினிமா பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பல தசாப்தங்களாகத் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த ஓய்வு முடிவு, ஒட்டுமொத்தத் திரைத்துறையினர் மற்றும் அவரது லட்சக்கணக்கான ரசிகர்களிடையே பேரதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களது தகாப்த நாயகனைத் திரையில் தொடர்ந்து பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு, இந்த விலகல் செய்தி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. எனினும், அவரது 175-வது மெகா படம் எதுவாக இருக்கும், யார் இயக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் தற்போதே கோலிவுட் வட்டாரங்களில் தொற்றிக்கொண்டுள்ளது.
