CINEMA
“எது உண்மை, எது பொய்னே தெரியல!”.. இணையத்தில் பரவிய ஆபாச வீடியோ…நடிகை கஸ்தூரியின் அதிரடி பேட்டி..!
90-களில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, தற்போது தனது துணிச்சலான அரசியல் விமர்சனங்கள் மூலம் மக்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றிய சில சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, ஒரு துக்க நிகழ்வில் அவர் சிரித்துக் கொண்டிருந்தது போன்றும், மது போதையில் நடனமாடியது போன்றும் வெளியான காட்சிகள் இணையத்தில் பேசுபொருளாக மாறின.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, தனது நடன வீடியோவை பார்த்து தன் குழந்தைகளே ஆச்சரியப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இணையத்தில் பரவும் போலி வீடியோக்கள் குறித்து பேசிய அவர், சமந்தா, த்ரிஷா மற்றும் ராஷ்மிகா மந்தனா போன்ற முன்னணி நடிகைகளுக்கும் இதேபோன்ற ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஆபாச மற்றும் போலி வீடியோ சிக்கல்கள் ஏற்பட்டதை சுட்டிக்காட்டினார். இதுபோன்ற சூழலில், ஒரு வீடியோவில் இருப்பது தான் இல்லை என்பதை நிரூபிப்பது மிகவும் கடினமான ஒன்று என்றும், இன்றைய காலகட்டத்தில் எது உண்மை, எது தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பொய் என்பதைக் கண்டறிவதே பெரும் சவாலாக மாறிவிட்டது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
