CINEMA
சூர்யாவின் புதிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? சிங்கம் 2-வுக்கு பின் பிரம்மாண்ட கம்பேக்!..340 கோடி வசூல் சாதனை…சூர்யா எடுத்த அதிரடி முடிவு!
நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனையைப் படைத்து வருகிறது. ‘சிங்கம் 2’ திரைப்படத்திற்குப் பிறகு கடந்த சில வருடங்களாகவே சூர்யாவுக்கு எதிர்பார்த்த அளவிற்கான ஒரு மெகா ஹிட் படம் அமையாமல் இருந்தது. ஒரு வலுவான வெற்றிக்காகக் காத்திருந்த சூர்யாவுக்கு, ‘கருப்பு’ திரைப்படம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து, அவரது சினிமா மார்க்கெட்டை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. உலகளவில் சுமார் 340 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ள இத்திரைப்படம், தமிழகத்தில் மட்டுமே 200 கோடி ரூபாய் வரை வசூலித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களுக்கான சம்பளத்தை 100 கோடி ரூபாயாக உயர்த்தியிருப்பதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாகவே தனது சம்பளத்தை உயர்த்தாமல் இருந்த சூர்யா, ‘கருப்பு’ படத்தின் அசுரத்தனமான வசூல் சாதனைக்குப் பிறகே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சூர்யா பெரும்பாலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் அல்லது தனது உறவினர்களின் நிறுவனங்களிலேயே அதிகம் நடித்து வந்தாலும், இனிவரும் காலங்களில் அவரது அதிகாரப்பூர்வ சம்பளத் தொகை 100 கோடியாகவே நீடிக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
