CINEMA
இளைஞர்களின் கனவுக்கன்னிக்கு என்னாச்சு?சோசியல் மீடியாவில் இனி அவர் வரமாட்டாரா?மமிதா எடுத்த அதிரடி முடிவு..!!
‘பிரேமலு’ திரைப்படம் மூலம் தென்னிந்திய இளைஞர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்த முன்னணி இளம் நடிகை மமிதா பைஜு, தற்போது சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகப்போவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். எப்போதும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி, ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் அவர், எந்தவொரு குறிப்பிட்ட காரணத்தையும் குறிப்பிடாமல் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார். இதனால் அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
இருப்பினும், மமிதா பைஜு சமூக வலைத்தளங்களை விட்டு முழுமையாக விலகிவிடவில்லை. அவர் இல்லாத இந்த இடைவெளிக் காலத்தில், அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களை அவரது நிர்வாகக் குழுவினர் தொடர்ந்து கவனித்துக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் பிரபல நடிகை கயாடு லோஹரும் இதேபோல் சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மமிதாவும் அதே வழியைப் பின்பற்றியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
