CINEMA
நடிகர் ஆர்யா மீது பாய்ந்தது வழக்கு!.. ஹைதராபாத் காவல் நிலையம் கொடுத்த திடீர் ஷாக்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா மீது ₹1.80 கோடி மோசடி செய்ததாக ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். ‘தாஹேர் சினி டெக்ஸ்’ என்ற தனியார் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆர்யாவுக்கு எதிராக ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளது. அந்தப் புகாரில், நடிகர் ஆர்யா தங்களது நிறுவனத்திடம் இருந்து படப்பிடிப்புக்கான அதிநவீன உபகரணங்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தியதாகவும், ஆனால் அதற்கான வாடகைத் தொகையான ₹1.80 கோடியை நீண்ட நாட்களாகத் தராமல் ஏமாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த புகாரைத் தொடர்ந்து, முதற்கட்ட விசாரணை நடத்திய ஜூபிலி ஹில்ஸ் போலீசார் நடிகர் ஆர்யா மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் 318-வது பிரிவின் கீழ் அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு உபகரணங்கள் வாடகைக்கு எடுத்த விவகாரத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் மீது குற்றவியல் வழக்கு பாய்ந்திருப்பது, தமிழ் மற்றும் தெலுங்குத் திரை உலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
