LATEST NEWS
“என்னை அமைச்சராக்க தவெக பார்த்தாங்க!”.. உண்மையை போட்டுடைத்த திமுக மாஜி அமைச்சர்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் தனக்கு அமைச்சர் பதவி தருவதாகக் கூறி பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் நடைபெற்ற திமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தவெக தரப்பில் இருந்து தன்னைத் தொடர்புகொண்டு, தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறு ராஜினாமா செய்துவிட்டு தங்கள் பக்கம் வந்தால், தவெக சார்பில் தங்களை அமைச்சர் ஆக்குகிறோம் என்று அவர்கள் ஆசைவார்த்தை காட்டியதாகவும் அவர் பொதுமேடையில் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மேலும் அதிர்ச்சியூட்டும் தகவலாக, தனக்கு எதிரான ஒரு குறிப்பிட்ட கைது நடவடிக்கையின் போதுதான் தவெக தரப்பினர் இந்த அரசியல் பேச்சுவார்த்தையையும் பேரத்தையும் முன்னெடுத்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார். தான் கடுமையான சட்ட நெருக்கடியில் இருந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, தவெக இந்த அரசியல் காய்நகர்த்தலைச் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் இரு தரப்பிலும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தன் வசம் இழுத்து, ஆட்சியை உலுக்க அல்லது கவிழ்க்கும் நோக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்தான் தவெக MLA-க்களிடம் ரகசிய பேரம் பேசினார் என்ற எதிர் புகாரும் தவெக தரப்பிலிருந்து கிளப்பப்பட்டிருந்தது. இவ்வாறு இரண்டு கட்சிகளுக்கும் இடையே எம்.எல்.ஏ-க்களை இழுப்பதற்கும், பேரம் பேசுவதற்கும் நடந்ததாகக் கூறப்படும் இந்த அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
