LATEST NEWS
6 நாட்களில் 3 நாடுகள்.. பிரதமர் மோடியின் மெகா ஸ்கெட்ச்.. உலக நாடுகளை அதிர வைக்கும் இந்தியாவின் புதிய பிளான்..!!
பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தடுத்து மேற்கொண்ட அரசுமுறைப் பயணங்கள், இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகால புவிசார் அரசியலையும், அதன் வியூகங்களையும் தீர்மானிக்கும் மிக முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கடல் வர்த்தக வழித்தடமான மலாக்கா நீரிணைக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் ‘சபாங்’ துறைமுக மேம்பாட்டிற்கு இந்தியா இந்த பயணங்களின் மூலம் புதிய முக்கியத்துவத்தை அளித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையைப் போலவே உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கடல் பகுதியில், இந்தியாவின் இந்த வியூகம் நாட்டின் கடல்சார் பாதுகாப்பையும், வர்த்தகப் பலத்தையும் உலக அரங்கில் பெருமளவில் உயர்த்தும் என புவிசார் அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்த பயணத்தின் மற்றொரு மைல்கல்லாக, உலகிலேயே மிக அதிகமான யுரேனிய வளத்தைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவுடன் இந்தியா தனது அணுசக்தி ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தூய்மையான ஆற்றல் இலக்குகளை எட்டவும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் வழிவகை செய்யும். அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இந்த முந்நாட்டுப் பயணங்கள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகிய மூன்று தூண்களில் இந்தியாவின் உலகளாவிய நிலையை அடுத்த கால் நூற்றாண்டிற்கு வலுவாக நிலைநிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
