LATEST NEWS
எங்க தண்ணி வருதோ இல்லையோ அங்க தண்ணி வரணும்.. நான் காவேரியை சொன்னேன்பா… திமுக கூட்டத்தில் உதயநிதியின் சர்ச்சை பேச்சு… திரிஷா, திரிஷா என கோஷமிட்டதால் பரபரப்பு..!!
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் அமைதியாக இருப்பதாக விமர்சித்த அவர், “எங்கே தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கே தண்ணீர் வர வேண்டும்” என்று இரட்டை அர்த்தத்தில் பேசினார். கூட்டத்தில் இருந்தவர்கள் அதற்கு சிரித்ததைத் தொடர்ந்து, தான் காவிரி தண்ணீரைப் பற்றித்தான் குறிப்பிட்டதாக அவர் உடனடியாக விளக்கமளித்தார். எனினும், அவர் பேசிய விதம் அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் நடிகை ‘த்ரிஷா.. த்ரிஷா..’ என உரக்கக் கோஷமிட்டனர். ஏற்கனவே திமுக மேடைகளில் நடிகை த்ரிஷா குறித்த விவகாரங்கள் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், தற்போதும் அதே போன்றதொரு சூழல் பொதுக்கூட்டத்தில் அரங்கேறியுள்ளது. காவிரி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாழ்வாதாரப் பிரச்சினையைப் பற்றி பேசும் மேடையில், இத்தகைய இரட்டை அர்த்த பேச்சுகளும், நடிகை குறித்த கோஷங்களும் எழுப்பப்படுவது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் தற்பொழுது கடுமையான விவாதங்களை உருவாக்கியுள்ளது.
