CRIME
“இவனெல்லாம் ஒரு மனுஷனா..?!” கணவன் இறந்த சில மணி நேரத்திலேயே மருமகளுக்கு நேர்ந்த பயங்கரம்.. சொந்த மாமனாரே செய்த அசிங்கம்… கிராம மக்கள் கொடுத்த ‘ஸ்பாட் ஃபனிஷ்மென்ட்’..!!
திரிபுராவில் கணவன் இறந்த சில மணி நேரத்திலேயே, சோகத்தில் இருந்த மருமகளை 80 வயதான மாமனார் ஈவு இரக்கமின்றி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனை இழந்து தவித்த பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய குடும்ப நபரே இந்த அக்கிரமத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
இச்சம்பவத்தை அறிந்த ஆத்திரமடைந்த கிராம மக்கள், அந்த முதியவரைத் தர்ம அடி கொடுத்து, செருப்பு மாலை அணிவித்துச் சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்று காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொந்த வீட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், குடும்ப வன்முறைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
