CRIME
“இவனுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா..?!” மனைவியின் கைகால்களை முறித்த கொடூரன்… குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு ஓடிய கணவன்.. திடுக்கிடவைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் ஜன்காம் மாவட்டம் பச்சன்னபேட்டை மண்டலத்திற்குட்பட்ட ஓபுல் கேசவாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திர ரெட்டி என்பவருக்கும், அவரது மனைவி மாதவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மகேந்திர ரெட்டிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து மாதவி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திர ரெட்டி, தனது மனைவியைக் கொடூரமாகத் தாக்கி, அவரது கைகள் மற்றும் கால்களை முறித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.
భర్త కిరాతకం.. భార్య కాళ్లు, చేతులు విరిచి పిల్లల్ని ఎత్తుకెళ్లాడు
జనగాం జిల్లా బచ్చన్నపేట మండలం ఓబుల కేశవపురం గ్రామంలో జరిగిన ఘటన
స్థానికంగా ఉండే మహేందర్ రెడ్డి, మాధవి అనే దంపతులకు ఇద్దరు పిల్లలున్నారు
అయితే.. మహేందర్కు మరో మహిళతో ఎఫైర్ ఉండటంతో నిలదీసిన మాధవి
ఈ విషయంపై… pic.twitter.com/4WPwINZVkQ— PulseNewsBreaking (@pulsenewsbreak) August 3, 2026
கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு, மகேந்திர ரெட்டி தங்களது இரண்டு குழந்தைகளையும் பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். படுகாயமடைந்த மாதவி காவல்துறையை அணுகி, தன் கணவர் தன்னை அடித்துக் கொல்ல முயன்றதாகவும், குழந்தைகளைக் கடத்திச் சென்றுவிட்டதாகவும் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
