LATEST NEWS
1,500-ல் இருந்து 2,500 உயர்வு.. தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொடூர நோய்.. பொது சுகாதாரத்துறை ஆய்வில் வெளியான பகீர் உண்மை..!!
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை 25 விழுக்காடு வரை கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சுகாதார ஆய்வாளர்கள் தங்களது கடுமையான கவலையைத் தெரிவித்துள்ளனர். கடந்த 2020-21-ம் நிதியாண்டில் 1,500 ஆகக் பதிவாகியிருந்த தொழுநோயாளிகளின் எண்ணிக்கை, தற்போது 2,500 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட மற்றும் வட்டார அளவில் நோயாளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தொடக்க நிலையிலேயே உரிய சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்டுள்ள சுணக்கமே இந்தத் திடீர் எண்ணிக்கைப் பெருக்கத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நோய் பரவலுக்கு மிக முக்கியக் காரணமாக, தொழு நோயை வட்டார அளவில் தீவிரமாகக் கண்காணித்துக் கண்டறியும் “மேற்பார்வையாளர்” பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் அப்படியே கைவிடப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. கள அளவில் நோயைக் கண்டறியும் பணியாளர்கள் இல்லாததால், ஆரம்பக் கட்டத்திலேயே தொழுநோயைக் கண்டறிந்து குணப்படுத்தும் ஒழிப்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், நோய் கண்டறியப்படாத நபர்கள் மூலம் மற்றவர்களுக்கும் இந்தத் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகச் சுகாதாரத் துறை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
