LATEST NEWS
“உடலுறவை மறுத்த கணவன்.. பசுவின் சிறுநீரை குடிக்க வைத்த மாமியார்…!” முன்னாள் எம்பி குடும்பத்தில் அம்பலமான பயங்கரம்..!!!
மகாராஷ்டிராவின் தானேவில் உள்ள உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக் ராவத், அவரது மனைவி மற்றும் கவுன்சிலரான அவரது மகன் கீதேஷ் ராவத் ஆகியோர் மீது, அவர்களது மருமகள் கிரிஜா ராவத் கொடுத்த புகாரின் பேரில் மூடநம்பிக்கை எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மூடநம்பிக்கை சடங்குகளுக்காக தன்னை ‘பசுவின் சிறுநீரை’க் குடிக்க வற்புறுத்தியதாகவும், தனது முடியைப் பிடுங்கி, மாந்திரீகர்களிடம் அழைத்துச் சென்று மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் மருமகள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கிரிஜா ராவத் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த ஏழு ஆண்டுகளாக தான் சமூக மற்றும் உணர்ச்சி ரீதியான கொடுமைகளை எதிர்கொண்டு வருவதாகவும், பலமுறை பட்டினி போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஊட்டியில் நடந்த தேனிலவின் போது தனது கணவர் தன்னிடம் உடல்ரீதியான உறவை மறுத்ததாகவும், அவரது மலட்டுத்தன்மை பிரச்சனையை மறைக்க மாமியார் வீட்டினர் தன்னை மாந்திரீகர்களிடம் அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது கணவனுடன் நெருங்க முயன்றதற்கு தான் தாக்கப்பட்டதாகவும், அவர்கள் இருவரும் உடல்ரீதியாக நெருங்கினால் கணவர் இறந்துவிடுவார் என்று மாந்திரீகர்கள் கூறியதாக எச்சரித்ததாகவும் கிரிஜா குற்றம் சாட்டியுள்ளார்.
மறுபுறம், இந்த விவகாரம் குறித்து பேசிய முன்னாள் எம்பி விநாயக் ராவத் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றிலும் நிராகரித்துள்ளார். தங்களது குடும்பத்திடம் விவாகரத்து ஜீவனாம்சமாக ரூ.12 கோடி பணம், மூன்று அறைகள் கொண்ட ஒரு வீடு மற்றும் ஒரு கார் ஆகியவற்றை மருமகள் தரப்பு கேட்டதாகவும், அதற்கு தாங்கள் இணங்க மறுத்ததால் பழிவாங்கும் நோக்கில் இந்த பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல்துறை தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
