LATEST NEWS
அதுதான் நான் செய்த மிகப்பெரிய முட்டாள்தனம்..! “ஆசைக்காக ரூ. 1.9 கோடி மைக்ரோசாப்ட் வேலையை விட்ட இளைஞர்” 5 மாதங்களுக்குப் பின் சொன்ன அதிர்ச்சி உண்மை..!!!
சுவிட்சர்லாந்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு 2,00,000 டாலர் சம்பளத்தில் பணிபுரிந்து வந்த 26 வயதான கிறிஸ்டியன் ஹார்ம்ஸ் என்ற இளைஞர், தனது கார்ப்பரேட் வேலையைத் திடீரென ராஜினாமா செய்தார். சமூக ஊடகங்களில் ‘கண்டென்ட் கிரியேட்டராக’ சாதிக்க வேண்டும் என்ற ஆசையாலும், சொந்தக் கனவைத் தொடர வேண்டும் என்ற நோக்கத்தினாலும் இந்த மிகப்பெரிய முடிவை அவர் எடுத்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து அங்கு 5 மாதங்கள் தங்கித் தனது புதிய பயணத்தைத் திட்டமிடத் தொடங்கினார்.
அவர் நினைத்தபடி ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பதும், நிறுவனங்களுக்கு வீடியோக்கள் தயாரிப்பதும் நிஜ வாழ்க்கையில் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பல மாதங்கள் உழைத்தும் முறையான திட்டமிடல் இல்லாததாலும் அவரால் எந்த ஒரு வருமானத்தையும் ஈட்ட முடியவில்லை. இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “மைக்ரோசாப்ட் வேலையை விட்டது எனது வாழ்க்கையிலேயே நான் செய்த மிகப்பெரிய முட்டாள்தனம்” என்று வேதனையோடு பகிர்ந்துள்ளார். கார்ப்பரேட் வேலையை விடுவது என்பது வெறும் பண இழப்பு மட்டுமல்ல, அதனுடன் வரும் பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தையும் இழப்பது போன்றது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DZsiiCmzY_Z/?utm_source=ig_web_button_share_sheet
ஆஸ்திரேலியாவில் அவர் தங்குவதற்கான 5 மாதக் கெடு முடிவடைய இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில், வேறு வழியில்லாத இக்கட்டான சூழலில் அவர் இணையம் வழியாகத் தனது முதல் டாலரை ஈட்டினார். திட்டமிட்ட பல மாதங்களில் நடக்காத விஷயம், காலக்கெடு நெருங்கிய கடைசி நேரத்தில் சாத்தியமானது என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் மக்கள் பொதுவாகத் தங்களின் வெற்றிகளை மட்டுமே காட்டும் நிலையில், கிறிஸ்டியன் தனது தோல்விகளையும் பயத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்ட விதம் பலரைக் கவர்ந்துள்ளதுடன், பலரும் அவருக்கு இணையத்தில் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
