National
ஐயோ..! “மிக்ஸர் சாப்பிட்ட பிஞ்சு உயிர் போச்சே” மூச்சுத்திணறி 3 வயது குழந்தை பலியானதால் கதறும் பெற்றோர்… கேரளாவில் அதிர்ச்சி..!!
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புரம் பகுதியில், மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 வயதுக் குழந்தையின் தொண்டையில் நிலக்கடலை சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மிக்ஸரைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலக்கடலை குழந்தையின் தொண்டைக்குள் சென்று அடைத்துக் கொண்டதால், குழந்தைக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பதறிப்போன பெற்றோர் குழந்தையை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், துரதிர்ஷ்டவசமாகச் சிகிச்சை பலனின்றி அந்தப் பிஞ்சு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறிய குழந்தைகளுக்கு இதுபோன்ற கடினமான உணவுகளை வழங்கும்போது பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
