CINEMA
அப்பா,அம்மா பிரிவு சர்ச்சை… மௌனம் கலைத்த விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..! பரபரப்பு பின்னணி..!!
பிரபல நடிகரும் தற்போதைய அரசியல் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகிய இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருவதாக விவாகரத்து சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக தனது பெற்றோர் குறித்து பொதுவெளியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், தான் தனது எதிர்காலத்திற்காகத் திரைத்துறையை தேர்வு செய்தபோது, தனது பெற்றோர் தனக்கு அளித்த நேர்மறையான ஆற்றலும் ஆதரவும் தன்னை மிகவும் ஊக்கப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது இந்தத் சினிமா பயணத் தொடக்கத்தில் தனது பெற்றோர் மட்டுமின்றி, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோரும் தன்னைத் தனிப்பட்ட முறையில் பெரிதும் ஊக்கப்படுத்தியதாக ஜேசன் சஞ்சய் அந்த நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
