LATEST NEWS
துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்..! முகத்தில் புன்னகையோடு பங்கேற்க தமிழக அரசு தந்த செம ஹேப்பி நியூஸ்..!!
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் “கல்வியைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. “ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க வேண்டும்” என்ற காமராசரின் உயரிய கனவை நனவாக்கும் வகையிலும், தமிழகக் கல்வியில் அவர் ஏற்படுத்திய புரட்சியை நினைவு கூரும் வகையிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. வினாடி வினா, இன்ஸ்டா ஸ்டோரி, ஓவியம், குறும்படம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். காமராசர் அவர்கள் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அளித்த பங்களிப்புகளைப் பள்ளி மாணவர்கள் முழுமையாக அறியும் நோக்கில் வினாடி வினாப் போட்டி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது படைப்புகளை ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. போட்டிகளுக்கான விரிவான விதிமுறைகள் மற்றும் வகுப்பு வாரியான தகுதி விவரங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழிகாட்டுதல்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
