LATEST NEWS
இந்த காலத்துல இப்படியொரு பொண்ணா..! “கல்லூரிக்குச் செல்லும் முன் இளம்பெண் செய்யும் அந்த ஒரு காரியம்..இணையத்தைக் கண் கலங்க வைத்த நிஜ தேவதை..!!
கேரளாவைச் சேர்ந்த 20 வயதேயான அஸ்வதி என்ற இளம் பெண், தனது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே தன்னம்பிக்கையோடு போராடி வருகிறார். தினமும் அதிகாலை வேளையில் கல்லூரிக்குச் செல்லும் முன்பாக, சுமார் 60 வீடுகளுக்குச் சென்று நாளிதழ்களை விநியோகிக்கும் பணியை இவர் மேற்கொண்டு வருகிறார். தன் வயதைச் சேர்ந்த மற்ற இளைஞர்கள் உறங்கும் நேரத்தில், அஸ்வதி தனது உழைப்பின் மூலம் விடியலைத் தேடுகிறார்.
At just 20, Aswathy from Kerala delivers newspapers to 60 homes every morning before college to support her mother’s medical treatment and continue her education. pic.twitter.com/OR8zjWkijv— Aaradhya Nirmalkar (@mukeshnir007) August 8, 2026
தனது தாயாரின் மருத்துவச் செலவுகளுக்குத் தேவையான பணத்தைத் திரட்டுவதற்கும், சொந்தமாகத் தனது உயர்கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்கும் இந்த வேலையை அவர் செய்து வருகிறார். வறுமையும் சூழ்நிலையும் முடக்க நினைத்தாலும், தளராத மன உறுதியோடும் கடமை உணர்ச்சியோடும் உழைக்கும் அஸ்வதியின் இந்த முயற்சி, சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளையும் மரியாதையையும் பெற்று வருகிறது.
