LATEST NEWS
“நெஞ்சை பதறுது..! கட்டிட இடிபாடுகளுக்கு நடுவே சிக்கிய 6 வயது சிறுமி..” 60 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் நடந்த அதிசயம்.. உலகையே வியக்க வைத்த வீடியோ..!!
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக, 6 வயது சிறுமி ஒருவர் கட்டிட இடிபாடுகளுக்கு நடுவே மற்றும் சேற்றுக்குள் சிக்கி முழுமையாகப் புதைந்துள்ளார். பேரழிவின் கோரப்பிடியில் சிக்கிய அச்சிறுமியைக் காப்பாற்ற மீட்புக் குழுவினர் இரவு பகலாகத் தங்களது தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர். இறுதியாக, சுமார் 55 முதல் 60 மணி நேரத் தொடர் அசாத்தியப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த மீட்புக் குழுவினர் அச்சிறுமியை இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து பத்திரமாகவும் அதிசயத்தக்க வகையிலும் உயிருடன் வெளியே எடுத்துள்ளனர்.
இருப்பினும், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அந்தச் சிறுமியின் பெற்றோரைப் பற்றிய எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்களா அல்லது வேறு எங்காவது சிக்கியுள்ளார்களா என்பது குறித்துத் தொடர்ந்து தேடுதல் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட இந்த கொடூர வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றம், ஏற்கனவே பல நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்து ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலைய வைத்துள்ள நிலையில், இந்த 6 வயது சிறுமியின் அதிரடி மீட்பு நடவடிக்கை பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது.
