LATEST NEWS
‘சாதாரண மேட்டருக்கு ரூ.300, சீக்ரெட்டுக்கு ரூ.20,000..!’ புரணி பேசியே 2 வீடு கட்டிய பாட்டி..! நம்மூர் பாட்டிங்களுக்கு செம்ம பிசினஸ் ஐடியா..!!
ஊர்ப்பக்கம் புரணி பேசுவதை பொதுவாக வேலை வெட்டி இல்லாதவர்கள் செய்யும் பொழுதபோக்கு என்றுதான் கூறுவார்கள். ஆனால், கொலம்பியா நாட்டைச் சேர்ந்த ஒரு பாட்டி, அதே புரணி பேசுவதையே தன் தொழிலாக மாற்றி, அதில் வந்த வருமானத்தைக் கொண்டே இரண்டு வீடுகளைக் கட்டியுள்ளார். இவர் சாதாரண விஷயங்களைக் கேட்பதற்கே ரூ.300 கட்டணம் வசூலிக்கிறாராம்; அதுவே ‘டாப் சீக்ரெட்’ தகவல்கள் என்றால், அதன் முக்கியத்துவத்திற்கு ஏற்ப கூடுதல் பணம் தர வேண்டுமாம்.
ஒருமுறை நபர் ஒருவர், தன்னைப் பற்றிய ரகசியம் தன் மனைவியின் காதுகளுக்குப் போகாமல் இருக்க இந்த பாட்டிக்கு ரூ.20,000 வரை கொடுத்து சமாளித்துள்ளார். சும்மாவே ஊர்க் கதைகளைப் பேசும் நம்மூர் பாட்டிமார்களுக்கு இது உண்மையிலேயே ஒரு செம்ம பிசினஸ் ஐடியா தானே!
