LATEST NEWS
“ஊழல் செய்ய முடியாதவர்களின் கேவலமான பிளான்..!” எதிர்க்கட்சிகளின் முகத்திரையைக் கிழித்த அமைச்சர்… அலறி அடிக்கும் அரசியல் களம்!
ஊழல் செய்ய முடியாத எதிர்த்தரப்பினர், தவெக ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைச்சர் விக்னேஷ் சாடியுள்ளார். ஊழலற்ற தவெக ஆட்சியில் பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்றும், இந்த ஆட்சியில் அவதூறுகளுக்கும் ஆபாசப் பேச்சுக்களுக்கும் எவ்வித இடமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த கால திமுக ஆட்சியில் தான் மதுவிலக்குத் துறையில் பெருமளவில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதேவேளையில், தவெகட்சியினர் பல்வேறு விவகாரங்களில் லஞ்சம் வாங்குவதாக எதிர்கட்சியினர் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் விக்னேஷ், தங்களது ஆட்சியின் நேர்மையைச் சகித்துக் கொள்ள முடியாமலே எதிர்த்தரப்பினர் இதுபோன்ற வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
