LATEST NEWS
இனி கணக்கு பாடம் கஷ்டமே இல்லை..! மாணவர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்..! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!
அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கணக்கு பாடங்களின் தலைப்புகளை மாற்ற திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிய முறையில் மாணவர்களுக்குக் கணக்கு பாடத்தை ஆசிரியர்கள் கற்பிக்கும் வகையில், அதற்கான புத்தகங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.
மேலும், வெறும் கணக்குகளாக இல்லாமல் கதைகளின் வழியே பாடத்தைச் சொல்லிக் கொடுக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதன் மூலம், இந்த புதிய பாடத்திட்டம் குழந்தைகளை மையப்படுத்திய கல்வியாக அமையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
