LATEST NEWS
வாரிசு அரசியல் இனி செல்லுபடியாகாது…” தமிழக அரசுக்குக் கிடைத்துள்ள புதிய சுவாசம் CM விஜய்… திராவிடக் கட்சிகளைத் தாக்கி அண்ணாமலை பேச்சு..!!
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். INDIA TODAY நிகழ்வில் பேசிய அவர், திராவிட கட்சிகள் தங்களை சீர்திருத்திக்கொள்ளாமல் உண்மையான மாற்றத்துக்கு வாய்ப்பில்லை என்றும், வாரிசு அரசியல் இனி எடுபடாது என்றும் கூறியுள்ளார்.
மேலும், வாரிசுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் களநிலவரம் முற்றிலும் மாறிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ள ‘சிஎம் விஜய்’ அரசு என்பது நீண்ட காலத்துக்குப் பின் மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு புதிய சுவாசம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
