LATEST NEWS
அந்த ஒரு விஷயத்துக்காக நயன்தாராவை ரிஜெக்ட் பண்ண பிரபல இயக்குனர்…. என்ன காரணம் தெரியுமா….????
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்மையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது ஜவான் மற்றும் கனெக்ட், இறைவன் மற்றும் நயன்தாரா 75 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் முதன்முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி மற்றும் அஜித்துடன் பில்லா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நடிக்க வந்த போது அவரை இயக்குனர் பார்த்திபன் தன்னுடைய குடைக்குள் மழை படத்தின் நாயகியாக முதன் முதலில் தேர்வு செய்துள்ளார்.
பின்னர் நயன்தாராவை கதாநாயகியாக தேர்வு செய்த மறுநாள் தன்னை சந்திக்க வரும்படி பார்த்திபன் கூறியுள்ளார். ஆனால் சொன்ன நேரத்திற்கு நயன்தாராவால் அவரை சந்திக்க முடியவில்லை. இந்த ஒரு காரணத்தினால் படத்திலிருந்து நயன்தாராவை அவர் தூக்கி விட்டார். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் மதுமிதா என்ற நடிகையை பார்த்திபன் நடிக்க வைத்ததாக ஒரு செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
