LATEST NEWS
திமுகவில் வெடித்தது அடுத்த பூகம்பம்…!! ஸ்டாலினின் முடிவால் அதிருப்தி…. நேருக்கு நேர் மோதிய உதயநிதி…!!
கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவுக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல், தற்போது பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது. 234 தொகுதிகளிலும் ரகசியமாகத் திரட்டப்பட்ட கள ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், தவறு செய்தவர்கள் மீது இப்போதைக்கு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல் எல்லோரையும் அரவணைத்துச் செல்லலாம் என மு.க.ஸ்டாலின் எடுத்த மென்மையான முடிவு கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவால் ஆத்திரமடைந்த உதயநிதி ஸ்டாலின், துரோகம் செய்தவர்களைத் தப்பவிட்டால் அடிமட்டத் தொண்டர்களின் மனநிலை என்னவாகும் எனக் கேள்வி எழுப்பியதுடன், தவறு செய்தவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைமைக்குக் கடுமையான நெருக்கடி கொடுத்துள்ளார்.
தேர்தல் தோல்விக்குக் காரணமான சுயநல கார்ப்பரேட் வியூகக் குழுவை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்பதில் 99 சதவீதத் தொண்டர்கள் ஒற்றைக் குரலில் உறுதியாக உள்ளனர். மேலும், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 25-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களைப் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என உதயநிதி பிடிவாதமாக இருக்கும் வேளையில், மூத்த நிர்வாகிகளைப் பகைத்துக் கொள்ள ஸ்டாலின் தயங்குவதாகக் கூறப்படுகிறது. “அரவணைப்பு அரசியலா” அல்லது “அதிரடிச் சுத்திகரிப்பா” என்ற இந்த இருவேறு கருத்து மோதல்களால் அறிவாலய வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
