LATEST NEWS
ஸ்டாலின் ஆட்சியில் அப்படி.. விஜய் ஆட்சியில் இப்படி..! கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் பொய் பேசுகிறாரா…? அய்யநாதனின் அதிரடி அம்பலம்..!!!
தமிழக அரசியலில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் ஆளுங்கட்சியான திமுக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.இந்தச் சூழலில், ‘அறம்நாடு’ யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான அய்யநாதன், கரூர் கூட்ட நெரிசல் விபத்து மற்றும் விஜய் தரப்பின் அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பல அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விஜய்யின் நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்றும், செய்தியாளர்களைப் பொது நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகள் வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கரூர் சம்பவத்தின் போது காவல்துறையின் வழிகாட்டுதல்களை விஜய் தரப்பு திட்டமிட்டே அலட்சியப்படுத்தியதாக அய்யநாதன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார். “மக்கள் நெரிசல் அதிகமாக இருப்பதால் அந்த இடத்திற்குப் பேருந்தைக் கொண்டு செல்ல வேண்டாம்” என்று டிஎஸ்பி எச்சரித்ததையும் மீறி, தங்களது சுயவிளம்பரப் படப்பிடிப்பிற்காக பேருந்தை அங்கே கொண்டு போய் நிறுத்தியதே 41 பேரின் மரணத்திற்குக் காரணம் என்று அவர் விவரிக்கிறார். தற்போது தங்களைக் காத்துக்கொள்ள “போலீசார் தவறாக வழிகாட்டிவிட்டனர்” என்று முதலமைச்சர் விஜய் மாற்றிப் பேசுவது அப்பட்டமான பொய் என்றும், முந்தைய திமுக ஆட்சியில் ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது காவல்துறையினர் திறம்படச் செயல்பட்டே விபத்துகளைத் தடுத்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் திமுக மற்றும் செந்தில் பாலாஜி மீது விஜய் தரப்பு தனிப்பட்ட கோபத்தைக் கொண்டிருப்பதன் பின்னணியையும் அய்யநாதன் உடைத்துள்ளார். செந்தில் பாலாஜியை சிபிஐ விசாரித்துவிட்டு வந்த பிறகுதான், கரூர் சம்பவத்தில் விஜய் தரப்பு செய்த தில்லுமுல்லுகளும், வெளியிலிருந்து ஆட்களைக் கூட்டிவந்து கேமராக்கள் அமைத்து நாடகமாடிய விபரங்களும் ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டன.
இதன் காரணமாகவே “நம்மை மாட்டிவிட்டவர் செந்தில் பாலாஜி” என்ற கோபம் விஜய் தரப்பிற்கு அவர் மீது இருப்பதாக அய்யநாதன் கூறுகிறார். மேலும், ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் உதயநிதி ஸ்டாலினின் அரசியலைக் குறிவைத்து, பழியை முழுமையாகக் காவல்துறை மீது திருப்புவதாகவும் அவர் சாடியுள்ளார்.இறுதியாக, இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ ஏன் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். குற்றப்பத்திரிகையில் விஜய் தரப்பின் அலட்சியமே விபத்திற்குக் காரணம் என்று இருப்பதால், அவர்களைக் காப்பாற்ற சிபிஐ திட்டமிட்டு வழக்கை நீர்த்துப்போகச் செய்யப் பார்க்கிறது என்பது அவரது குற்றச்சாட்டு. கரூர் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற இடத்தையும் இடைத்தேர்தல் பிரச்சாரமாக விஜய் மாற்றிவிட்டதாகக் கூறும் அய்யநாதன், விஜய் வெறும் தவெக தலைவராக மட்டும் செயல்படாமல், ஒரு முதலமைச்சராகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், திமுக மீது தொடர்ந்து வெறுப்பு அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
