LATEST NEWS
திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக…. கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரித்திகா….!!!!
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை தான் ரித்திகா. இவர் விஜய் டிவியில் ராஜா ராணி மற்றும் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர். இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் ரித்திகா விஜய் டிவி பிரபலமான வினோத் என்பவரை காதலித்து நேற்று முன்தினம் எளிமையான முறையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் அவர் பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி எனக் கூறி தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
