LATEST NEWS
“நாம் உண்மையான சுதந்திரம் அடைந்தோமா”.. இந்திய தாய் கண்ணீர் விடுகிறாள்.. உருக்கமான பதிவு போட்ட நடிகை ரேமா அசோக்..!!

தமிழ் சின்னத்திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ரேமா அசோக். விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளிலும் சீரியல்களிலும் நடித்து வருகின்றார். சீரியலில் இவரின் நடிப்பின் காரணமாள் இவரின் தாக்கம் இளைஞர்களை தன்வசம் திரும்பி பார்க்க வைத்தது. இவர் ஓடி விளையாடு பாப்பா, ஜோடி நம்பர் ஒன் போன்ற நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரெக்க கட்டி பறக்குது மனசு, சின்னத்தம்பி, சரவணன் மீனாட்சி மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்து தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அதேசமயம் இவர் தனியாக ஒரு யூடியூப் சேனல் நடத்திவரும் நிலையில் அதில் தினம்தோறும் பியூட்டி டிப்ஸ் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தேசிய கொடியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருந்த நிலையில் ரேமா அசோக் தேசிய கொடியுடன் முகத்தில் ரத்த கறை இருப்பது போல சில புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமான பதிவை போட்டுள்ளார். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க