LATEST NEWS
விஜய் டிவி சீரியல் நடிகை ராஷ்மி ஜெயராம் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம்….!!!!
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ராஷ்மி ஜெயராஜ். பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது எங்கே எப்படி உள்ளார் என்பதை தெரியவில்லை. பொதுவாகவே சீரியல் நடிகைகள் திருமணம் மற்றும் குடும்பம் என ஆன பிறகு சினிமா பக்கம் வருவது மிகவும் கடினம்தான்.
அப்படி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் ராஷ்மி ஜெயராஜ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்றான நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் ராஜபார்வை உள்ளிட்ட சீரியல்களில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.
இவரின் சிரிப்புக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சீரியலில் நடித்து முடித்த பிறகு திருமணம் மற்றும் குழந்தை என செட்டிலாகி விட்டார்.இவரின் சீமந்த புகைப்படம் மற்றும் குழந்தை பிறந்த செய்தி என அனைத்தையும் அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு அறிவித்தார்.
தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பிரைவேட் ஆக்கியுள்ள நிலையில் அவரின் புகைப்படங்கள் அவ்வளவாக இணையத்தில் வெளியாவதில்லை. தற்போது அவர் தனது மகள் மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட ஒரு அழகிய புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.