LATEST NEWS
“என்னம்மா இப்படி பண்றீங்களேமா…!” நடுரோட்டில் காரின் மேல் உட்கார்ந்து.. கையில் மது பாட்டிலுடன் ஓலா டிரைவரிடம் ரகளை… கேட்க வந்த பொதுமக்களிடம் இங்கிலீஷ்ல எகிறிய பெண்.. இணையத்தில் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!
ஹரியானாவில் பெண் ஒருவர் பொதுச் சாலையில் காரின் மீது அமர்ந்து, மது பாட்டிலைக் கையில் வைஸ்த்துக் கொண்டு ரகளை ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், அப் பெண் தனது ஓலா கேப் ஓட்டுநர் மீது மதுவை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் அவரை அமைதிப்படுத்த முயன்றபோது, அவர் அங்இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூச்சலிட்டுள்ளார்.
வைரலாகும் அந்த வீடியோ காட்சிகளின்படி, அப் பெண் அங்கிருந்தவர்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது. அருகில் இருந்தவர்கள் அவரைச் சமாதானப்படுத்த முயன்றபோது, அவர் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு விலகிச் செல்லாமல், ஆங்கிலத்தில் கத்தியபடி தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார். பொது இடத்தில் இந்த அளவுக்கு அப் பெண் நடந்துகொண்ட விதம் மற்றும் ஏற்படுத்திய இடையூறுகள் இணையத்தில் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.
இந்தச் சம்பவம் சமூக வலைதள பயனர்களிடையே பல்வேறு கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான பொதுச் சாலையில் வாகனத்தின் மீது அமர்ந்து மது பாட்டிலுடன் ரகளை செய்த பெண்ணின் நடவடிக்கையை பலரும் கண்டித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், இந்த வைரல் வீடியோவில் இருக்கும் பெண்ணின் அடையாளம், சம்பவம் நடந்த துல்லியமான இடம் மற்றும் அவர் மீது ஏதேனும் அதிகாரப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை.
