LATEST NEWS
பரபரப்பு..! பார்ட்டி ஃபண்ட் மூலம் நேரடியாக ஆதாயம் அடைந்தது யார் யார் தெரியுமா..? வசமாக சிக்கிய தந்தை – மகன்… அவையில் ED ஃபைலை கையில் எடுத்து ரகசியங்களை போட்டுடைத்த முதல்வர் விஜய்…!!
சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய திமுக ஆட்சியின் மீதான தனது ஊழல் புகார்களை அடுக்கடுக்காக அவிழ்த்து விட்டார். வீராணம் திட்ட முறைகேடுகள் மற்றும் கரூர் கும்பலின் மாமூல் வசூலைத் தொடர்ந்து, திமுகவின் உயர்மட்டத் தலைவர்களை நேரடியாகக் குறிவைத்து மற்றுமொரு அதிர்ச்சித் தகவலை அவர் வெளியிட்டார்.
அவையில் தொடர்ந்து ஆக்ரோஷமாகப் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சிக் காலத்தில் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் பெருமளவு பணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தை கையில் எடுத்தார். இந்த நிதி திரட்டப்பட்டதன் பின்னணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “பார்ட்டி ஃபண்ட் வாங்கியதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும்தான் மிக முக்கியமான நபர்கள் என்று நாட்டின் மிக உயரிய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறையே தெரிவித்துள்ளதாக” அவையிலே பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்
அமலாக்கத்துறையின் விசாரணை அறிக்கைகளை ஆதாரமாகக் காட்டிப் பேசிய முதலமைச்சர் விஜய், கட்சிக்கு வந்த இந்த ‘பார்ட்டி ஃபண்ட்’ மூலம் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் தங்களின் அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி நேரடியாகவே பெரும் ஆதாயம் அடைந்துள்ளதாகக் கூறி பரபரப்பைக் கூட்டினார். இதனால் அவையில் இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் கோபமடைந்து கூச்சலிட்டதால், பேரவை மீண்டும் போர்க்களமாக மாறியது.
