LATEST NEWS
#BREAKING: பேரவையில் திமுக உறுப்பினர்கள் தர்ணா.. பெரும் பரபரப்பு..!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார். அவரது உரையின்போது, சட்டமன்றப் பேரவை வரலாற்றில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் குறித்துப் பேசியதால் அவையில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்கு உடனுக்குடன் பதிலளிக்க எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் அனுமதி கோரினர். எனினும், சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்ததால் சட்டமன்ற வளாகத்திற்குள் பெரும் அமளி வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு அவையின் மையப்பகுதியில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு அவையிலேயே பதிலளிக்க உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். சபாநாயகரின் இந்தச் செயலைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பேரவை நடவடிக்கைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன.
