LATEST NEWS
மீண்டும் பதற்றம்..! “ஹர்மூஸ் நீரிணை எங்களின் சிவப்புக் கோடு” அமெரிக்காவுக்கு ஈரான் மரண அடி… தலைநகர் தெஹ்ரானில் குண்டுமழை..!!
கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் தற்போது முற்றிலும் முறிவடைந்துள்ளது. ஈரான் மீதான தனது வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா நேற்று தீவிரப்படுத்தியதோடு, வடக்கு பகுதிகள் வரை அதை விரிவுபடுத்தியுள்ளது. ஈரானியக் கடற்படை முற்றுகையை மீற முயன்றதாகக் கூறி கப்பல் ஒன்றின் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, அப்பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், இத்தாக்குதல்கள் மேலும் தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்காக இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கி வருவதால், இப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் இதுவரை 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்கா தனது தாக்குதல் இலக்குகளை விரிவுபடுத்தி, தற்போதைய வன்முறைச் சுழற்சியில் முதன்முறையாக ஈரானின் தலைநகரான தெஹ்ரானைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கியபோது, கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இந்த நடவடிக்கையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக உயர்ந்ததுடன், பேச்சுவார்த்தைகளில் ஈரானுக்குச் சாதகமான சூழலையும் ஏற்படுத்தியது. இதற்கிடையே, ஈரானின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்களைத் தாக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்து வரும் நிலையில், அமெரிக்கா இதில் தலையிட்டால் இப்பகுதியில் உள்ள அனைத்து உள்கட்டமைப்புகளையும் தகர்ப்போம் என்றும், ஹார்முஸ் நீரிணை என்பது ஈரானின் அசைக்க முடியாத “சிவப்புக் கோடு” என்றும் ஈரானிய ராணுவம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது
