இல்லத்தரசிகளுக்கு பேரிடி..! ரூ.2,500 உயர்வு இப்போதைக்கு சாத்தியமில்லை..? அமைச்சர் KAS கொடுத்த ஷாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இல்லத்தரசிகளுக்கு பேரிடி..! ரூ.2,500 உயர்வு இப்போதைக்கு சாத்தியமில்லை..? அமைச்சர் KAS கொடுத்த ஷாக்..!!

Published

on

மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்த அமைச்சர் செங்கோட்டையன் கருத்து ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. வரும் பட்ஜெட்டில் இந்தத் தொகை உயர்த்தி அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு, திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்தே ₹1,000 உரிமைத் தொகையை வழங்கத் தொடங்கியது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். மேலும், தமிழகத்தின் தற்போதைய கடன் சுமையை சரிசெய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த விளக்கத்தின் மூலம், வரவிருக்கும் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை ₹2,500 ஆக உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாவது சந்தேகம் தான் என்று அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கடன் சுமையைக் காரணம் காட்டி கால அவகாசம் தேவை எனக் கூறியிருப்பது, இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படும் என்பதையே காட்டுவதாகக் கருதப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in