“70 வருஷம் டேட் கேட்டாரு”… இப்படி யாராவது ப்ரொபோஸ் பண்ண முடியுமா?.. காதல் கதையை பகிர்ந்த சரண்யா பொன்வண்ணன்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

“70 வருஷம் டேட் கேட்டாரு”… இப்படி யாராவது ப்ரொபோஸ் பண்ண முடியுமா?.. காதல் கதையை பகிர்ந்த சரண்யா பொன்வண்ணன்..!!

Published

on

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எட்டு வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் சரண்யா பொன்வண்ணனை ஒருதலையாக காதலித்தாக அவரே கூறியுள்ளார். ஆனால் ஷூட்டிங்கில் ஒரு நாள் கூட அவரிடம் இவர் சிரித்து பேசியது இல்லை. இது குறித்து பேசிய சரண்யா, திடீரென்று ஒரு நாள் அவர் எனக்கு போன் செய்து நான் ஒரு படம் எடுக்கிறேன் அதற்கு உங்கள் dates வேண்டுமென்று என்னிடம் கேட்டார். அதற்கு எத்தனை நாட்கள் என நான் கேட்டதற்கு அவர் 70 வருஷம் எனக் கூறினார். உடனே நான் யோசித்து சொல்கிறேன் என்று கூறிவிட்டு அவர் காமெடிக்கு பேசுகிறார் என அப்படியே விட்டு விட்டேன்.

Advertisement

ஆனால் மீண்டும் 10 நாட்கள் கழித்து அவர் போன் செய்து என்னிடம் கேட்டார். அதன் பிறகு அவரைப் பற்றி விசாரித்த போது பாரதிராஜா சார் அவரைப் பற்றி உயர்வாக என்னிடம் கூறினார். அதன் பிறகு நான் சம்மதம் தெரிவித்தேன். பின்னர் இரு குடும்பத்தினரும் பேசி எங்களது திருமணம் நடைபெற்றது என்று தனது காதல் திருமணத்தின் சுவாரஸ்யமான கதைகளை சரண்யா பகிர்ந்து உள்ளார்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Galatta Media இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@galattadotcom)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in