LATEST NEWS
தமிழ் சினிமாவில் பல ஸ்டார்களை உருவாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…..!!!!
தென்னிந்திய சினிமாவில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியவர் தான் கேகே ரத்தினம். இவரை ஜுடோ ரத்னம் என்று தான் பலரும் அழைப்பார்கள். இவர் முதன்முதலாக கடந்த 1959 ஆம் ஆண்டு தாமரை குளம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு வல்லவன் ஒருவன் என்ற திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்ற தொடங்கினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய இவர் இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான தலைநகரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் பொன்னம்பலம், சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பல பிரபலங்களை உருவாக்கிய பெருமை இவருக்கே சேரும்.
இந்நிலையில் 92 வயதாகிய இவர் கேட்பாரற்று உடல்நிலை சரியில்லாமல் உயிருக்கு போராடி வந்த நிலையில் வேலூர் குடியாத்தம் பகுதியில் இருக்கும் அவரின் வீட்டில் உடல் நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.