TRENDING
என்னடா நடக்குது இங்க?…. ராபர்ட் மாஸ்டர் – ரட்சிதாவுக்கு ஒரே கட்டிலில் படுக்கை…. பிக்பாஸ் செய்யும் குறும்புத்தனம்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தானாக முன்வந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா என அடுத்தடுத்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற கடந்த வாரம் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது கடுமையான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதா மீது தனது காதலை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றார். தற்போது பிக் பாஸில் அரண்மனை டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ராபர்ட் மற்றும் ரட்சிதாவை ராஜா ராணியாக பிக் பாஸ் மாற்றியுள்ளார். அரச குடும்பத்தினர் உறங்குவதற்கு ஒரு கட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டிலில் தான் ராஜா ராணி உறங்க வேண்டும் என்று படைத்தலைவன் அசிம் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டவுடன் ராபர்ட் மாஸ்டர் மிகுந்த மகிழ்ச்சி அடைய ரட்சிதா கோபப்பட்டு நான் இதில் படுக்க முடியாது என கூறி எனக்கு தனியாக படுக்க வேண்டும் என கூறியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரடாகி வரும் நிலையில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரட்சிதாவுக்கு இடையே பிக் பாஸ் இது போன்ற வேலை பார்த்து வருகிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
