CINEMA
எங்க அம்மா குடும்பத்துக்காக வாழ்ந்தாங்க…. ஆனா அவரை பற்றி மத்தவங்க… ஒரு மகளாக நான் பார்த்த ரணம்… ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் உருக்கம்,..!!
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தனது தாயார் ஒரு சிறந்த நடிகையாகவும், முன்மாதிரியாகவும் இருந்தபோதிலும், சமூக வலைதளங்களிலும் வெளியிலும் அவரைப் பற்றி வந்த எதிர்மறையான கருத்துக்கள் ஒரு மகளாக தனக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு அவர் மீதான விமர்சனங்கள் குறையும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் சிலர் இன்னும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் முடிவுகளை விமர்சிப்பது வருத்தமளிப்பதாகவும் ஜான்வி கூறியுள்ளார். “எனது அம்மா ஒரு எளிய மனிதர், அவர் தனது குடும்பத்திற்காகவே வாழ்ந்தார்; ஆனால் மக்கள் அவரைப் புரிந்து கொள்ளாமல் பேசியது கொடுமையானது” என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சினிமா குடும்பத்தில் இருந்து வந்ததால் தானும் பல விமர்சனங்களைச் சந்திப்பதாகக் குறிப்பிட்ட ஜான்வி, தனது தாயாரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்காத வகையில் கடினமாக உழைக்க விரும்புவதாகக் கூறினார். தனது அம்மாவின் ஆசிர்வாதமும், அவர் கற்றுக்கொடுத்த பாடங்களுமே தன்னை இன்றும் வழிநடத்தி வருவதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
