Uncategorized
30 ஆண்டுகளுக்கு முன் தகனம் செய்யப்பட்ட தாயாரின் கல்லறையில் இருந்த ஓட்டை..! – அதன் உள்ளே பார்த்த மகனுக்கு, ஏற்பட்ட அதிர்ச்சி..!
பிரித்தானியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த தாய் தகனம் செய்யப்பட்ட இறுதிச்சடங்கு கூடத்துக்கு சென்ற மகன் தாயின் சாம்பல் பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டதை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தார். Mark Harris என்பவருக்கு தற்போது 41 வயதாகிறது. 30 வருடங்களுக்கு முன்னர் அவரின் தாய் Muriel Amos உயிரிழந்த நிலையில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டு கல்லறையின் அருகே அவரின் சாம்பல் தாழி எனப்படும் பானையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு புதைக்கப்பட்டது.
இந்த சூழலில் சாம்பலின் சிறு பகுதியை எடுத்து தான் அணியவுள்ள செயினில் சேர்த்து கொள்ள Mark விரும்பினார். இதையடுத்து தாயின் கல்லறைக்கு சென்ற போது அங்கு பெரிய ஓட்டை இருந்தது. பின்னர் உள்ளிருந்த தாழியை எடுத்து பிரித்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் தாயின் சாம்பல் ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து ஒழுங்கற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தது. இது Mark-ஐ பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அவர் கூறுகையில், இது போல எத்தனை பேரின் சாம்பலை பிளாஸ்டிக் பையில் வைத்திருப்பார்கள் என தெரியவில்லை.
பாரம்பரிய முறைபடி இல்லாமல் இப்படி சாம்பல் அடைக்கப்பட்டிருப்பது வேதனை தருகிறது. சாம்பல் வைக்கப்பட்டுள்ள இடத்தை யாரோ தோண்டியுள்ளார்கள், ஆனால் அந்த இடத்தை விலங்கு தோண்டியதாக இறுதிச்சடங்கு இடத்தில் உள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால் என் தாயின் கல்லறையில் இருந்து யாரோ உடமைகளை திருட முயற்சித்துள்ளார்கள் என கருதுகிறேன், அதனால் தான் இந்த விடயம் நடந்துள்ளது என கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய குறித்த இறுதிச்சடங்கு கூடத்தின் தலைவர், 30 வருடங்களுக்கு முன்னர் இந்த விடயம் நடந்துள்ளதால், இந்த தவறு குறித்து கண்டுபிடிப்பது சாத்தியம் இல்லை. இனிமேல் சாம்பல்கள் சரியாக தாழியில் அடைக்கப்பட்ட்டு பாதுகாக்கப்படும் என கூறியுள்ளார்.
