LATEST NEWS
ஜூலை 2 முதல் சனி பகவானின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்…. பணமழையில் நனையப்போகும் ‘அந்த’ 4 ராசிகள்…. அதிர்ஷ்டம் கூரையை பிச்சிட்டு கொட்ட போகுது….!!
வரும் ஜூலை 2 ஆம் தேதி காலை 8:22 மணி அளவில், மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்குள் நுழைகிறார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீடிக்கும் சனியின் இந்த விசேஷ நட்சத்திர மாற்றத்தால் மிதுனம், கடகம், கன்னி மற்றும் கும்பம் ஆகிய நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது. இந்த காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு உத்தியோகத்தில் பெரிய பதவிகளுடன் தீராத உடல் உபாதைகளும் நீங்கும். கடக ராசி நேயர்களுக்குப் புதிய வழிகளில் வருமானம் பெருகி, நீண்ட நாள் வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும்.
அதேபோல் கன்னி ராசியினருக்குப் புதிய தொழில் தொடங்க உகந்த சூழல் உருவாவதுடன், உழைப்பிற்கேற்ற இரட்டிப்பு லாபமும் குடும்பத்தில் நிம்மதியும் கைகூடும். சனியை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசியினருக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, பண நெருக்கடிகள் முற்றிலுமாகக் குறையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் எதிர்பாரா லாபமும், வியாபாரத்தில் முந்தைய நஷ்டங்களைச் சரிசெய்யும் வாய்ப்புகளும் தேடிவரும். மொத்தத்தில் சனியின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியானது, குறிப்பிட்ட இந்த நான்கு ராசிகளுக்கும் பொருளாதார ரீதியாக ஒரு பொற்காலமாக அமையவுள்ளது.
