LATEST NEWS
“திமுக புள்ளிகளுக்கு ஸ்கெட்ச் போடும் விஜய்…?”ஆதாரங்களுடன் கோதாவில் குதிக்கும் தவெக… அதிரப் போகும் அறிவாலயம்…!!
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் பல கோடி ரூபாய் சுருட்டிய புகாரில் திமுகவின் ஊடகத் தொடர்பு பிரிவின் முன்னாள் துணைத் தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் இயங்கி வரும் தனியார் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துவதற்கும், அவற்றுக்கான தடையின்மைச் சான்றிதழை பெற்றுத் தருவதற்கும் இடைத்தரகராகச் செயல்பட்டு அவர் இந்த மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் பள்ளிப் பரப்பளவின் ஒரு சதுர அடிக்கு ஐம்பது ரூபாய் வரை கட்டாய வசூல் செய்து, ஒட்டுமொத்தமாக சுமார் நூறு கோடி ரூபாய் வரை அவர் முறைகேடாகத் திரட்டியதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால ஆட்சிகளிலேயே இத்தகைய லஞ்சப் புகார்கள் நிலவி வந்தாலும், தற்போதைய விசாரணையில் இந்த மோசடிப் பின்னணியில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் நேரடித் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளதால் போலீசாரின் விசாரணை வளையம் தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே, ஆளுங்கட்சியின் இத்தகைய ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை உறுதி செய்யத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தரப்பு தீவிரமாக வியூகம் வகுத்து வருகிறது. இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் விஜய், அடுத்தடுத்துப் பல திமுக பிரமுகர்களின் முறைகேடுகளை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதால் வரும் நாட்களில் கைது நடவடிக்கைகள் இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
