LATEST NEWS
உக்ரைன் போட்ட ஸ்கெட்ச்…! ஒரே நேரத்தில் 660 டிரோன்களை ஏவி 12 ரஷிய மாகாணங்களுக்கு குறி…. சுக்குநூறாக்கி மாஸ் காட்டிய ரஷ்யா…. பெரும் பரபரப்பு…!!
கடந்த 1,583 நாட்களாகத் தொடர்ந்து நீடித்து வரும் உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு இடையேயான போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் தங்களது உயிர்களைப் பறிகொடுத்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவிகளோடு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷியாவிற்குப் பதிலடி கொடுத்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட போர் நிறுத்தத்திற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முற்றிலும் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் தற்போதும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று ரஷியாவை நிலைகுலையச் செய்யும் நோக்கில் உக்ரைன் ராணுவம் தனது வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான வான்வழித் தாக்குதலைப் பதுங்கிப் பாய்ந்து நடத்தியுள்ளது.
ரஷியாவின் எல்லைக்குட்பட்ட சுமார் 12 முக்கிய மாகாணங்களைக் குறிவைத்து, ஒரே நேரத்தில் 660 அதிநவீன போர் டிரோன்களை ஏவி உக்ரைன் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், ரஷியாவின் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defense Systems) உடனடியாகச் செயல்பட்டு, உக்ரைனால் ஏவப்பட்ட அத்தனை டிரோன்களையும் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தி அழித்துள்ளதாக ரஷியத் தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷிய ராணுவத்தின் இந்தத் துரிதமான தற்காப்பு நடவடிக்கையின் காரணமாக, இந்த மிகப்பெரிய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித உயிரிழப்போ அல்லது பெரிய அளவிலான காயங்களோ ஏற்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
