LATEST NEWS
பெரும் பரபரப்பு..! “திருமாவளவனை சிஎம் ஆக்க எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் முயன்றனர்” – அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட ரகசியத் தகவல்.. அதிர்ந்துபோன தமிழக அரசியல்…!!
“தேர்தலுக்குப் பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சிகள் நடந்தன” என்று அதிமுகவைச் சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் மறைமுக உதவியுடன், அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் இணைந்து திருமாவளவனை சிஎம் நாற்காலியில் அமர வைக்க முயன்றதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த ரகசியத் திட்டம் மற்றும் நகர்வுகள் குறித்து அதிமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவின் இந்த முக்கியத் தலைவர்கள் தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தினரோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளதாகவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார். இந்த ரகசியக் கூட்டணியின் காரணமாகவே, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு ஆதரவாக இவர்கள் வாக்களித்ததாக அவர் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கட்சித் தலைமையின் முடிவுகளுக்கு முரணாகச் செயல்பட்ட இவர்களின் இத்தகைய நகர்வுகள் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர் பேசியுள்ளார்.
முன்னாள் அமைச்சரான அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் இந்த அதிரடிப் பேட்டி, அதிமுகவிற்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல்களையும், தமிழக அரசியல் கட்சிகளுக்கு இடையே திரைமறைவில் நடக்கும் ரகசிய உடன்பாடுகளையும் அம்பலப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் தற்பொழுது தவெக, அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளிடையே புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.
