LATEST NEWS
உடனே தூக்குங்க..! முதல்வர் விஜய் எச்சரித்த சில மணி நேரத்தில் அதிரடி வேட்டை… “ரூ.10,000 லஞ்சம் கேட்ட செங்கோட்டை சர்வேயர்… அடுத்த நொடியே நடந்த மாஸ் சம்பவம்..!!
தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்பு குறித்து முதலமைச்சர் விஜய் கரூரில் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களில், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் ராமர் செல்வம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கூட்டுப் பட்டாவைத் தனிப்பட்டாவாக மாற்ற ரூ.10,000 லஞ்சம் கேட்டதாக மாடசாமி அளித்த புகாரின் அடிப்படையில், ரசாயனம் தடவிய நோட்டுகளைப் பெறும்போது அவர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
அரசு ஊழியர்கள் பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடாது என முதல்வர் ஸ்ட்ராங்காகப் பேசியிருந்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சர்வேயர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தலைமையின் உத்தரவு அடிமட்டம் வரை பாயத் தொடங்கிவிட்டதாக, முதல்வரின் எச்சரிக்கைக்குப் பின் நடந்த இந்த கைது நடவடிக்கை மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
