LATEST NEWS
திகிலூட்டும் நடுக்கடல் விபத்து… வியட்நாமில் இந்தியப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்தது..! அவசர அவசரமாக உருவான கட்டுப்பாட்டு அறை..! தற்போதைய நிலை என்ன..?
வியட்நாமின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவொக் தீவு அருகே, இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு ஒன்று நடுக்கடலில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், வியட்நாம் உள்ளூர் மீட்புக்குழு அதிகாரிகளும் கடலோரக் காவல் படையினரும் உடனடியாக விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஃபூ குவொக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு துரதிர்ஷ்டவசமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், விபத்துக்கான சரியான காரணம் மற்றும் பயணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும், விபத்து குறித்த துல்லியமான தகவல்களையும் உடனுக்குடன் வழங்குவதற்காக ஹோ சி மின் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் ஒரு அவசரக் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இதன் மூலம் மீட்புப் பணிகள் மற்றும் பயணிகளின் நிலவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
