CRIME
“உதவிக்கு பதிலா எனக்கு என்ன தருவ?”.. நடுக்காட்டில் காரை நிறுத்திய காவலாளி… ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் திகில் பின்னணி..!!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த 36 வயது ஸ்டெஃபனி என்ற பெண், இத்தாலியின் சிசிலி பகுதியில் கைட்போர்டிங் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, முன்பின் தெரியாத ஐரோப்பிய வம்சாவளி நபர் ஒருவரின் காரில் லிஃப்ட் கேட்டு ஏறியுள்ளார். கார் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, ஓட்டுநர் மற்ற கார்களிலிருந்து விலகி வேறு திசையில் அதிவேகமாகச் சென்றதால் ஸ்டெஃபனி பதற்றமடைந்தார். காரை நிறுத்தக் கோரியும் ஓட்டுநர் கேட்காததால், தனது நேரடி இருப்பிடத்தை கைட்போர்டிங் பயிற்றுவிப்பாளருக்கு அனுப்பினார். சுமார் 12 கிலோமீட்டர் பயணித்து ஒரு வீட்டின் வாசலில் கார் நின்றபோது, கதவு பூட்டப்படாததைச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெஃபனி அங்கிருந்து தப்பியோடினார். நீண்ட தூரம் ஓடி ஒரு சிறிய ஊரை அடைந்த அவர், அங்குள்ள பாதுகாப்புக் காவலர் ஒருவரிடம் மொபைல் செயலி மூலம் உதவி கோரினார்.
அவரை விடுதியில் விடுவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்ற அந்தப் பாதுகாப்புக் காவலரும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி, உதவிக்கு கைம்மாறாகத் தனக்கு என்ன செய்யப் போகிறாய் என்று தவறான எண்ணத்துடன் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டெஃபனி, மீண்டும் காரில் இருந்து தப்பித்து அருகிலிருந்த திராட்சைத் தோட்டத்தில் ஒளிந்துகொண்டார். பின்னர், பல மணி நேரப் பயத்திற்கும் போராட்டத்திற்கும் பிறகு எப்போதெல்லாம் கார் வருகிறதோ அப்போதெல்லாம் மறைந்து கொண்டு, வழியில் தானியங்கி இயந்திரத்தில் குளிர்பானம் வாங்கியதற்கான ஆதாரத்தைச் சேகரித்தபடி பத்திரமாகத் தனது விடுதியை வந்தடைந்தார். இந்த இரண்டு முறை மயிரிழையில் உயிர் தப்பிய கொடூரச் சம்பவத்தால், இத்தாலியில் வீடு வாங்கி வாழ வேண்டும் என்ற தனது கனவைத் தற்காலிகமாகக் கைவிட்ட ஸ்டெஃபனி, இனி எப்போதும் தனியாக வெளிநாடு செல்லப் போவதில்லை என்று தனது கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
